இலங்கையின் நாளாந்த கொவிட் நிலவரம் அதிகரிப்பு.

0

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் மேலும் 36 கொவிட் மரணங்கள் நேற்றுமுன் தினம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,844 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,231 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 629,347ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 18,158 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஏனையோர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply