இன்று வெளியான புதிய அதிவிசேட வர்த்தமானி.

0

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அறிவித்தல் ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக அந்த மருத்துவமனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நியமனம், பதவி உயர்வு, இடம் மாற்றம் உள்ளிட்ட ஏனைய நிறுவன நடவடிக்கை தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள் , அந்தந்த சேவைகளுக்காக தற்போது அமுலில் உள்ளவாறு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட சேவைகளுக்கான விசேட வேதனை முறை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வினவி பொருத்தமான வகையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply