நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான உணவுப் பொருட்களின் விலைகளை இம்மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, புதிய விலை திருத்தத்தின்படி, நாடாளுமன்ற சராசரி ஊழியர் ஒருவரின் (சராசரி உணவகம்) மாதாந்தக் கட்டணம் 200 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகவும், பொலிஸ் உத்தியோகத்தின் உணவுக்கான கட்டணம் 25 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



