மீன்பிடித் தொழில் இன்றி தமது வருமானத்தை இழக்கும் மக்கள்.

0

தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கையும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது என மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சிமுனை, நாவலடி, புன்னக்குடா உட்பட பல கரையோரப் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் இன்றைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடற் தொழிலாளர்கள் தமது படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து தூர இடங்களில் நிறுத்தியுள்ளனர்.

மேலும் வீரரகவா நிலை காரணத்தால் மீன் விற்பனை நிலையங்கள் மீன் வாளிகள் என்பன முற்றாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply