தடுப்பூசி அட்டையில் மாற்றம்- மக்களுக்கு விடுக்கப்படஎச்சரிக்கை.

0

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த தடுப்பூசி செலுத்திய அட்டையைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சட்டமா அதிபரின் அனுமதியுடன் சட்டரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.

ஆகவே , கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply