இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலநறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் ஆன வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply