நான்காவது தடுப்பூசியும் தயார்!

0

நாட்டில் தற்போது பரவலடைந்து வரும் ஒமிக்ரோன் பரவலை அடுத்து இஸ்ரேலில் நான்காவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது..

இதன்படி கொரோனாவுக்கு எதிராக நான்காவது தடுப்பூசியை செலுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் கருதப்படும்

இந்நிலையில் முன்னிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் 60வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நான்காவது தடுப்பூசி, வழங்கப்படவேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அத்துடன் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கபட்ட முதல் பொதுமகன் உயிரிழந்ததை அடுத்தே இஸ்ரேல் நான்காவது தடுப்பூசியை ஆரம்பிக்கவுள்ளது.

இதுவரை இஸ்ரேலில் 340 பேர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply