போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் அமைக்கப்படவுள்ள கங்கை விரைவுச்சாலை.

0

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி குறித்த மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையும் , கங்கை நதிக்கரையையும் இணைக்கும் ரூபா 339 கோடியில் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடியின் அன்மையில் திறந்து வைத்துள்ளார்.

இதற்கமைய அம்மாநிலத்தின் ஷாஜஹான்பூரில் கங்கை விரைவுப் பாதையை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகின்றார்.

இதன் பிரகாரம் நாட்டின் மிக நீளமான விரைவு சாலையாக இது அமைகிறது.

மீரட்நகர் முதல் பிரயாக்ராஜ் வரை ரூ.36,200 கோடி செலவில், 594 கிலோ மீட்டர் தொலைவிற்கு விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த விரைவுச் சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக பறப்பதற்கு, தரை இறக்குவதற்கு ஏதுவான வகையில் சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் விமான ஓடுதளம் ஒன்று அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply