நதிகளை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை.

0

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் நாட்டில் ஆறுகளை நெருங்கி காணப்படும் வீடுகளை அகற்றி அவற்றை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நதிகளை மாசுபடுத்து வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிலுள்ள 10,733 ஆறுகள் மாசடைந்து உள்ளதாகவும் அவற்றில் 1,474 இடங்கள் களனி ஆற்றை மாசுபடுத்தும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் இம்முறை சுரகிமு கங்கா திட்டத்தின் கீழ் களனி ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply