மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட ஒருவருக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஆறு மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும் என்று தொற்றுநோயியல் பிரிவு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது.
அத்துடன் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே இதனை அறிவித்துள்ளார்.



