சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்ற பக்தர்கள் இருவர் பரிதாபமாக பலி

0

தமிழகத்தின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கமைய அன்று முதல் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து கொள்வார்கள்.

இதனடிப்படையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நீலிமலை, அப்பச்சி மேடு மலைப்பாதை நேற்று முன் தினம் திறக்கப்பட்டது.

அந்த வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளங்கோவன் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த மாதேஸ்வரன் ஆகியோர் பம்பையிலிருந்து மலை ஏறும்போது நெஞ்சுவலி காரணமாக உடல் நலம் குன்றியது.

மேலும் இருவரையும் உடனே பம்பை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளது.

Leave a Reply