இன்று முதல் மின்சார தூண்டிப்பு ஏற்படாது.

0

இன்று முதல் நாட்டின் எந்த பகுதியிலும் மின்சார

தூண்டிப்பு ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் பிறப்பாக்கி செயலிழந்த நிலையில் காணப்பட்டது.

இதன் பிரகாரம் நாட்டின் சில பகுதிகளில் மாலை 6 மணி முதல் 9:30 வரையான காலப்பகுதியில் அரை மணி நேர மின்சார விநியோக தடை ஏற்பட்டது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்த நிலையில் காணப்பட்ட மின் பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாடு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இதன் அடிப்படையில் இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply