ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கமைய குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் மூன்று வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதன் பிரகாரம் சாவியை பெறுவதற்காக , தீபா தீபக் இருவரும் இன்று சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று இருந்தனர்.
குறித்த வீட்டு சாவியை கலெக்டர் விஜயராணி அவர்களுடன் கையளித்தார்.



