நான் மிகவும் வலிமையான பெண் தான் – நடிகை சமந்தா வெளியிட்ட அதிரடி தகவல்!

0

முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சமந்தா.

இவர் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார்.

அவரது விவகாரத்தின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவியது.

இதன்பிரகாரம் சமந்தா மீது பலி சுமத்தப்பட்டது.

இதனை மறுத்த சமந்தா தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கு சென்றுள்ளார் .

இந்நிலையில் விவகாரத்தினால் மனமுடைந்த இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் நடிகை சமந்தா கருத்து தெரிவிக்கையில் :
மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். விவகாரத்து செய்வதால் மனமுடைந்து இறந்து வந்துவிடுவேன் என்று நினைத்தேன்.

ஆனால் நான் இவ்வளவு வலிமையானவளாக இருப்பேன் என்று நினைக்கவில்லை.

நான் வலிமையானவன் என்பதில் பெருமை படுகின்றேன் .

சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மூலம் எனது வலிமை எனக்கு தெரிந்துள்ளது .

நான் இன்னும் எனது வாழ்க்கையை வாழவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply