இப்படத்தை பற்றி அவர் கூறும்போது :
இந்தக் காலத்துக்கு தேவையான கதையம்சம் கொண்ட படம் இது.
இந்த கதையை சரத்குமார் கேட்டதும் உடனடியாக நடிக்க சம்மதித்தார்.
இது எனக்கான கதை என்கிறார்.
மண்ணின் மகளாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் சுகாசினி மணிரத்னம் நடிக்கின்றார்.
இன்னொரு முக்கிய வேடத்தில் அஸ்வதி நடிக்கின்றார்.
இவர்களுடன் நந்தா, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இது அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த திரைப் படமாக இருக்கும் என்றார்.



