வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் தான் மாநாடு.
இதற்கமைய குறித்த படத்தை வி ஹவுஸ் புரெடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
அத்துடன் குறித்த படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் இதற்கு முன் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது.
இறுதியில் நவம்பர் 25 ஆம் திகதி அதாவது நாளைய தினம் ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதன் பிரகாரம் மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தள பக்கத்தில் , “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பு ” இதன் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றேன்
குறித்த படம் வெளியாகும் திகதி பின்னர் அறிவிக்கின்றேன்.
ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றேன் என்று பதிவு செய்துள்ளார்.