விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்ட 12 பேர் அதிரடி கைது.

0

முகப்புத்தகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வு ஒன்றை சுற்றி வளைத்த வெலிக்கம காவல்துறையினர் போதைப் பொருளுடன் 12 சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

இதற்கமைய குறித்த சுற்றிவளைப்பு வெலிகம காவல்துறையினரால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் மிதிகமவில் உள்ள உல்லாச விடுதியில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் இந்த சந்தேக நபர்கள் கொக்கேய்ன், ஐஸ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் 30 மற்றும் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply