பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் தேள்.
ஹரி குமார் இயக்கத்தில் இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார்.
அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் குறித்து பிரபு தேவா கூறுகையில் :
இயல்பை விடவும் பல மடங்கு அற்புதமான படத்தை தந்துள்ளார்.
ஹெரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் உதவி நடன இயக்குனராக பணியாற்றி இருக்கின்றோம்.
இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார்.
உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம்தான்.
ஆனால் இந்த படத்தில் எனக்கு நடன காட்சியை இல்லை.
மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதன் முறையாக நடித்து இருகின்றேன்.
நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர் .
நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார்.
ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராகத் திகழ்கின்றார்.
இவரது நடிப்பு அப் படத்தின் மிக முக்கிய அம்சமாக இருக்கும்.
இந்நிலையில் குறித்த படம் மிக அழுத்தமான படைப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.



