இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல்,சப்ரகமுவ, மத்திய , வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அவ்வாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு எதிர் பார்க்கப்படுகின்றது.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர்.



