கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்- எம்.எஸ் பாஸ்கர் தெரிவிப்பு.

0

தமிழகத்தில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கமைய பாலியல் தொல்லை சம்பவங்களை பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் எம் எஸ் பாஸ்கர் கண்டித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் :

இதற்கு முன்பு சென்னையில் ஆண்டின் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை இடம்பெற்றது.

மற்றும் ஒரு தனியார் பள்ளியில் சின்னஞ் சிறு மழலையை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ பதிவானது.

தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாளமுடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை.

என்ன நடக்கிறது பள்ளிகளில் படிப்பதா இல்லையா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் .

அத்துடன் இதற்கு தற்போது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறுனவர்களுக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது.

மேலும் அந்த வக்புரத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply