புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல்.

0

புத்தளம் மாவட்டத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய இவர் புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்றைய தினம் குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையுடன் கூடிய வானிலை காரணத்தால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.

இதன் பிரகாரம் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டஆராச்சிக்கட்டுவ, ஆனவிழுந்தாவ, பிங்கட்டிய, உடப்பு, முந்தல், தாராவில்லு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply