முன்னணி நடிகரின் வீட்டில் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை.

0

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் விஜயையின் வீட்டில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையிலுள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

நேற்றைய தினம் இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கமைய இந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்குள் நாள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.

இதன்பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என காவல்துறையினர் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விஜய் வீட்டில் வெடி குண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபர் ஏற்கனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருந்ததை தெரியவந்துள்ளது.

Leave a Reply