இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில்இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply