கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைதான பெண்.

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்னுடன் வெளியேற முயன்ற பிரஜை ஒருவர் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பெருந்தொகையான கொக்கேயின் அடங்கிய வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 39 வயதான கென்ய பிரஜை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply