தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சசிகலா தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கம் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது.
குறித்த நினைவிடத்தில் ஆண்டு தோறும் ஒக்ரோபர் 28,29,30 ஆம் திகதிகளில் தேவர் ஜயந்தி குருபூஜை இடம்பெறும்.
இந்த வருடத்திற்கான ஜயந்தி குருபூஜை விழா நேற்றைய தினம் தேவரின் ஆன்மிக விழாவோடு தொடங்கியது.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலா திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி ஏராளமானோர் அங்கு திரள்வார்கள் என்பதால் இருபத்தி ஒன்பதாம் திகதி அதாவது இன்றைய தினம் சசிகலா தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா