கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெறல்.

0

கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பெறல் வேலைத்திட்டத்தின் கீழ் கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெறல் (26) கந்தளாய் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 23 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் உரிய அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் இதன்போது பிரதேச அரசியல் தலைமைகள் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மூலமாக பெறப்பட்டமை விஷேட அம்சமாகும்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலபதி , கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் சமன் ஏக்கநாயக்க, கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி, பிரதேச அரசியல் தலைமைகள், அரச அதிகாரிகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply