பணப்பிரச்சனை தீர்ந்து செல்வம் சேரும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

0


ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் வழிபாடு செய்தால் பணப்பிரச்சனைகள் படிப்படியான தீரும்.


தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும். அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும்.


பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால், பண ரீதியான சிக்கல்கள் தீரத் தொடங்கும். ஓராண்டு வரை வழிபட்டு வந்தால், நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்; பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;


ஓராண்டுக்கு மேலாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம், நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும். ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும். – Source: Maalaiamalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply