வாகன ஓட்டுநர்களுக்கு விசேட அறிவிப்பு!

0

கொழும்பிற்கு பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வெளியிடப்படுள்ளது.

இதற்கமைய நீர்கொழும்பு வீதி, கண்டி வீதி மற்றும் பழைய அவிசாவெல்ல வீதியின் ஊடாக கொழும்பிற்கு பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கே காவல்துறையினர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய களனி பாலத்தின் கட்டுமான பணிகள் காரணத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலம் கட்டுமானப்பணிகள் காரணத்தால் பேஸ்லைன் வீதி மற்றும் துறைமுக நுழைவு வீதி ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply