கோப்பாயில் பட்டப்பகலில் நடந்த சம்பவம் – பொலிஸாரின் உடனடி நடவடிக்கை

0

கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் இன்று மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இணுவிலைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோப்பாய் காவல்துறை பிரிவில் நேற்று நண்பகல் வீடொன்றில் 10 தங்கப் பவுண் நகைகள் திருட்டுப்போனதாக காவல் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டது. வீட்டிலிருந்தவர் குளியலறையில் இருந்தவேளை இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply