இலங்கையில் சமையல் எரிவாயுவின் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கிய பின்னர் எரிவாயு நிறுவனங்கள் விலையைத் தீர்மானித்துள்ளன.
அதன்படி 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதென அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடனான கலந்துரையாடலின் போது ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.