கோட்டாவின் காதில் ரகசியத்தை ஊதிய தேரர்.

0

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பு – நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் கலந்துரையாடியுள்ளார். 

இக்கலந்துரையாடலானது இன்றையதினம் தொலைபேசியில் நடைபெற்றுள்ளது.

ஆசிரியர்கள் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் நீண்டநேர நடந்துள்ளது.

இக்கலந்துரையாடலின் போது கோட்டாபயவிடம் தேரர் கூறிய விடயம், 

5000 ரூபா கொடுப்பனவு என்பது ஆசிரியர்கள் அதிபர்களின் நீண்டகால சம்பளப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது என தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்வுக்கு அப்பாற் செல்ல முடியாத நிலைமையில் உள்ளதாக  இருப்பதாகசிறிலங்கா அரச தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply