வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

0

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இதுவரையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை

இதற்கமைய குறித்த தகவலை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

அத்துடன் தற்போது அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கும் வகையிலான முறைமை குறித்து விரிவாக ஆராயந்து வருகின்றது.

நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக தற்போது உடனடியாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

குறிப்பாக டொலர்களில் வரி செலுத்துவதற்கு ஒப்புக்கொள்ளும் நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறினார்

Leave a Reply