வைத்தியசாலை கட்டடத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.

0

திருகோணமலை பொது வைத்தியசாலை கட்டடத்தில் மரம் வீழ்ந்து பலத்த சேதம் ஏற்படுள்ளது.

நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் வளாகத்தில் நின்ற வேம்பு மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலையின் நடைபாதைக் கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது.

அதிஸ்டவசமாக எந்த உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை.

இதன்போது கட்டத்தின் கட்டுமானம் உறுதியற்ற தன்மை உள்ளதையும் காணலாம் குறிப்பாக தூண்கள் எவையும் கம்பி வைக்காமலேயே கட்டப்பட்டுள்ளமையும் மேலும் பல முறையற்ற கட்டுமானங்களும் வெளிவந்துள்ளன.

Leave a Reply