அடுத்த மாத இறுதிக்குள் முன்பள்ளி சிறுவர்களுக்கும் தடுப்பூசி!

0

முன்பள்ளி சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்பள்ளி சிறுவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தவும் பாடசாலைகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒன்றரை ஆண்டுகள் பாடசாலை மாணவர்களை பிணைக் கைதிகளாக வீட்டில் வைத்திருந்தது சிறுவர்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும குறித்த விடயம் தொடர்பில் வெல்கமவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply