யாழில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடாத்திய 35 பேர் தனிமைப்படுத்தலில்!

0

நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் பன் மடங்காக தீவிரமடைந்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள காலப்பகுதியிலும் அதனை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம் நடாத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் விழாவில் ஈடுபட்ட 20 பேரும், ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் இவ்வாறு தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

சுகாதார பிரிவினரும், யாழ் காவல்துறையினரும் இணைந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply