யாழில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

0

யாழ்.மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வர் குறித்த தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

இதற்கமைய பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 27 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 124 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் மாவட்டத்தில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை 348 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதுவரையில் யாழ் மாவட்டத்தில் 15475 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

Leave a Reply