கொவிட் தொற்றுப்பரவல் சூழ்நிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள கடனாளிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை வழங்கப்பட்ட சலுகைகளை யூடிப் அதனை பரிசீலனை செய்து கொள்ளுமாறு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகளையும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இந்த சலுகைகள் பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு 2022 ஜனவரி முதல் தொடர்ந்து தங்கள் நிலுவை தொகைகளை திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.



