திருநீறு,குங்குமம்,பஞ்சாமிர்தம்,அப்பம், அரவணை, நெய், லட்டு ஆகியவற்றை பிரசாதமாகக் தரும் கோயில்கள் உண்டு.
ஆனால் கடன் தொல்லை தீர வேண்டும் என்பதற்காக மண் சாதம் உருண்டையை ராமநாதபுரம் அருகே திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், கோயிலில் தருகின்றனர்.
இங்குள்ள வில்வமரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டி தருகின்றனர்.
இதை சிறிதளவு வாயில் போட்டுக்கொண்டால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.
