தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த எச்சரிக்கையை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விடுத்துள்ளது.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் வாகன சாரதிகள் அவதானத்துடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.