கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் நோயாளர் ஒருவரை படம்பிடிக்க முயன்ற இரு நபர்!

0

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் கைகலப்பு ஏற்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றது.

இதற்கமைய நேற்றைய தினம் கொவிட் பரிசோதனைக்காக இந்த சந்தேக நபர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் தமது கையடக்க தொலைபேசியில் அங்கிருந்த நோயாளர் ஒருவரை படம்பிடிக்க முயன்றுள்ளனர்.

அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அவர்களை தடுக்க முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் காயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply