யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மீண்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

0

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற்கொண்டு யாழ் போதனா மருத்துவமனையில் பணிப்பாளர் பதவியை வைத்தியர் த. சத்தியமூர்த்தி இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கமைய கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில் மேற்படிப்புக்காக சத்தியமூர்த்தி பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார்.

அவரது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ் ஸ்ரீ பகவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.

இருப்பினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய வைத்தியர் சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் கரணம் அவர் தனது மேற்படிப்பை பிற் போட்டு இன்று காலை 8 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply