களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,800 மெட்ரிக் தொன் சீனி!

0

இலங்கையில் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சீனியினை நுகர்வோர் அதிகார சபை இன்று கையளிக்கப்படவுள்ளது.

இதற்கமைய வத்தலை- மாபொல பகுதியிலுள்ள களஞ்சியசாலையிலே 4,800 மெட்ரிக் தொன் சீனி மீட்கப்பட்டது.

மேலும் குறித்த சீனியின் தொகையினை சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் ஊடாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply