தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய தகவல்!

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதிதடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதன் பிரகாரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள பொதுமக்கள் தங்களுடைய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மாத்திரம் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் என பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply