நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? நீக்குவதா?

0

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதிகட்ட தீர்மானம் இன்று வெளியாகவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொவிட் 19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி இன்றைய தினம் மீண்டும் கூடி குறித்த தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாளுக்கு நாள் பதிவாகும் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையினை ஆராய்ந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை நீக்குவதாஅல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் நாட்டின் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றினால் இரண்டு வாரங்களில் கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடடுள்ளார்.

Leave a Reply