நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனத்தில் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நேற்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதற்கமைய இந்த நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய தினங்கள் கலந்து கொண்டு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து ஆட்சியின் வழங்கியிருந்தனர்.
அத்துடன் மதுரை ஆதீனத்தின் 292 வது ஆதீனமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 13ஆம் திகதி காலமானார்.
அதன் பின்னர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 293 வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கு நேற்றைய தினம் முடி சூட்டும் நிகழ்வு இடம் பெற்றது.



