இலங்கையில் 5.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்!

0

யாழில் இருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற் கமைய 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், குண்டூர் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களிலும் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply