முக கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை!

0

சென்னையின் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் முக கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மண்டல அமலாக்க குழுவினரால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 16ம் திகதி ஒரு நாளில் மாத்திரம் சென்னையில் முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டில் 1,278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 லட்சத்து 55 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மே மாதம் 6ம் திகதி முதல் கொவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 48 ஆயிரத்து 33 நபர்களிடம் இருந்து 3 கோடியே 81 இலட்சத்து 63 ஆயிரத்து 590 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply