மீன்பிடி தோனிகள் வழங்கிவைப்பு

0

கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். ஜவாஹிர் அவர்களின் முன்மொழிவினூடாக அல் ஹிக்மா பவுன்டேசனினால் கந்தளாய் பிரதேச சுயதொழில் பயனாளிகள் சிலருக்கு நேற்றறைய தினம் மீன் பிடி வல்லங்கள் வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வானது கந்தளாய் குளத்தில் வைத்து கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் சமன் ஏக்கநாயக்க, அல் ஹிக்மா பவுன்டேசன் பணிப்பாளர் கலாநிதி இபாதுல்லா மௌலவி ஆகியவர்களின் பிரதான பங்குபற்றலுடன் நடைபெற்றது

கந்தளாய் பிரதேச சபையை பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து வட்டாரங்களையும் உட்படுத்தும் வகையில் இப்பயனாளிகள் சபை உறுப்பினர் ஏ.சீ.எம். ஜவாஹிர் அவர்களின் முன்மொழிவினூடாக தெரிவுசெய்யப்பட்டது

கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஜவாஹிர் அவர்களின் முன்மொழிவினூடாக இந்த உதவியை வழங்கிய அல் ஹிக்மா பவுன்டேசன் பணிப்பாளர் கலாநிதி இபாதுல்லா மௌலவி அவர்களுக்கு உறுப்பினர் நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply