அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்களோடு செல்பவர்கள் மாத்திரம்
புகையிரதத்தில் பயணம் மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுள்ளது.
இந்நிலையில் குறித்த அவனங்க்கள் எதுவும் இல்லாதவர்கள் மாகாணங்களுக்குகிடையில் பயணம் மேற்கொள்ள முடியாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் வேலைக்கு செல்வோருக்காக புகையிரத பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு புகையிரத ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



