கிழக்கு ஆயுர்வேத பொது மருத்துவமனை கொவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஆளுனர் பணிப்பு.

0

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று காலை உள்ளூர் மருத்துவம் மூலம் ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கப்பல்துறை, கிண்ணியா, புதுக்குடியிருப்பு ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகள் வழங்கப்படும்.

இன்று (10) காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆயுர்வேத ஆணையாளர் டாக்டர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் ஆளுநருக்கு இடையிலான கலந்துரைமாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை ஆராய்ந்து, அந்த குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, இந்த மருத்துவமனைகளில் 270 கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply